திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிக்குட்பட்ட காரணம்பேட்டை பகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் பொதுமக்கள் வரவேற்பு

May 1 2016 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிக்குட்பட்ட காரணம்பேட்டை பகுதியில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், தமிழகம் முழுவதிலும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, மக்களுக்கு பெரிதும் பயன்படும் பொது நலப் பணிகளை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். அந்த வரிசையில் ஒன்றாக, திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியின் கீழ் வரும் காரணம்பேட்டை கிராமத்தில் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முதலமைச்சர் ஆணையிட்டார். அதன்படி, தற்போது, அந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்டு, அதனை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். காரணம் பேட்டை கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெற்று வருகின்றனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு இக்கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00