தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சாதி மோதல்களை தூண்டிவிடும் வகையில் பேசுவதாக வைகோ மீது வழக்குப் பதிவு
May 1 2016 9:15AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சாதி மோதல்களை தூண்டிவிடும் வகையில் பேசுவதாக வைகோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் விகைகாட்டி என்ற கிராமத்தில் கடந்த 23-ம் தேதி வைகோ தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் சாதி மோதல்களை தூண்டிவிடும் வகையில் பேசியதாகவும், முதலமைச்சரைவிமர்சித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, தாசில்தார் அமுதா அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீசார் வைகோ மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.