தமிழக சட்டமன்றப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வரலாற்றுச் சாதனைகளை எடுத்துரைத்து, இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
சென்னை, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. பி.வெற்றிவேல், தொகுதிக்குட்பட்ட 46வதுவார்டு காந்திநகர், கல்யாணபுரம், மூர்த்திங்கர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச்சென்று வாக்கு சேகரித்தார்.
சென்னை, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. தாடி. ம.ராசு, தொகுதிக்குட்பட்ட 96வது வார்டு ஐ.சி.எஃப், புது ஆவடி சாலை, அம்பேத்கர் நகர், குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, உள்ளிட்டபகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சென்னை, துறைமுகம் தொகுதி, கழக வேட்பாளர் திரு. கே.எஸ். சீனிவாசன், தொகுதிக்குட்பட்ட போர்சுகீஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திருமதி A. நூர்ஜஹான், தொகுதிக்குட்பட்ட CIT நகர் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
வட சென்னை வடக்கு மாவட்டம், ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் வீடு வீடாகச் சென்று திரு.அன்வர்ராஜா எம்.பி. உள்ளிட்ட நிர்வாகிகள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறியும், சாதனை விளக்க பிரசுரங்களையும் வழங்கியும், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதி, 146 வட்டத்திற்குட்பட்ட மெட்ரோ நகர், கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில், கழக வேட்பாளர் திரு.பா.பென்ஜமின் வீடுவீடாகச் சென்று பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மாதவரம் சட்டமன்ற தொகுதி, கழக வேட்பாளர் திரு.டி.தட்ஷிணாமூர்த்தி, புழல் ஒன்றியம், புள்ளி லைன், தீர்த்தக்கரையம்பட்டு உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. வி.அலெக்ஸாண்டர், 87-வது வட்டத்திற்குப்பட்ட பாடி, திருவல்லீஸ்வரர்நகர், மூர்த்தி நகர், ஜெகதாம்பிகை நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருவள்ளூர் மேற்கு, ஆவடி தொகுதி கழக வேட்பாளர் திரு. க. பாண்டிய ராஜன், கோலடி, சுந்தரசோழபுரம் ஆகிய பகுதிகளில் கழக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. எஸ்.கே.ஏ. ஹைதர்அலி, தொகுதிக்குட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் வீதிவீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. மனோகரன், வாசுதேவநல்லூர், சிந்தாமணி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சிவநல்லூர், இலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணிக் கட்சி வேட்பாளர் திரு. எஸ். ஷேக்தாவூத், கழகத் தொண்டர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி கூட்டணிக் கட்சி வேட்பாளர் திரு. எம். தமிமுன்அன்சாரி தொகுதிக்குட்பட்ட ஏனங்குடி, ஆண்டிபந்தல், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு.ஓ.எஸ். மணியன், தொகுதிக்குட்பட்ட தேத்தாகுடிதெற்கு, தேத்தாகுடி வடக்கு ஆகிய கிராமங்களில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
மயிலாடுதுறை சட்டமன்றத்தொகுதி கழக வேட்பாளர் திரு. வி. ராதாகிருஷ்ணன், தொகுதிக்குட்பட்ட சித்தர்காடு, மறையூர், மூவலூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. சி.வி. சண்முகம், கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட மரகதபுரம், அரசமங்கலம், சேர்ந்தனூர், மழவராயனூர், சுந்தரிபாளையம், ஓட்டேரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் சென்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கரூர் மாவட்டம்அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, இந்திராநகர், ஓடையப்பட்டி, ஆண்டிப்பட்டி, நடுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், கழக வேட்பாளர் திரு. வி. செந்தில்பாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கிருஷ்ணராயபுரம் தொகுதி கழக வேட்பாளர் திருமதி. எம். கீதா, தொகுதிக்குட்பட்ட மாயனூர் ஊராட்சி, இ.பி.காலனி, அங்கு நகர், கிழிஞ்சநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
குளித்தலை சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு.ஆர். சந்திரசேகரன், தொகுதிக்குட்பட்ட லாலாப்பேட்டை கடைவீதி, கள்ளப்பள்ளி காலனி, சிந்தலவாடி, நரசிங்கபுரம், பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தொகுதிக்குட்பட்ட வடதண்டலம், பைங்கினார், அருகாவூர், ராமகிருஷ்ணாபுரம், பெரும்பள்ளம், சுண்டிவாக்கம், தண்டரை வடுகப்பட்டு ஆகிய கிராமங்களில், கழக வேட்பாளர் திரு. தூசி கே. மோகனை ஆதரித்து அமைச்சர் திரு. முக்கூர் என். சுப்பிரமணியன் வாக்காளர்களிடம் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திருமதி. ஜெயந்திபத்மநாபன், தொகுதிக்குட்பட்ட கொத்தூர் ஊராட்சி, பாலூர் ஊராட்சி, மசிகம் ஊராட்சி, சின்னதாமல்செருவு ஊராட்சி, பத்தலப்பல்லி ஊராட்சி, கொத்தப்பல்லி ஊராட்சி உட்பட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் தீவிரவாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார்.
ஆற்காடு சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. கே.வி. ராமதாஸ், தொகுதிக்குட்பட்ட விலாரி, தத்திரவாடி, தென்கழனி, பழையனூர், குண்டலேரி, மருதமங்கலம், கீழ்பாடி, வரதராஜபுரம், வெற்றிதாங்கல், வளையாத்தூர், நங்கமங்கலம், தாமரைப்பாக்கம், பல்லவராயன்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
காட்பாடி சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. SRK. அப்பு, தொகுதிக்குட்பட்ட அருப்புமேடு, மதிநகர், அண்ணாதிடல், ஈ.பி.காலனி, அரவிந்த் நகர், கருடாத்திரி நகர், எம்.ஜி.ஆர். நகர், சத்யா நகர், திருநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குசேகரித்தார்.
அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. ம. கலையரசு, தொகுதிக்குட்பட்ட பொய்கை, சத்தியமங்கலம், புத்தூர், மருதவள்ளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
வேலூர் சட்டமன்றத் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணிக் கட்சி வேட்பாளர் திரு. எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத், தொகுதிக்குட்பட்ட ராமநாயக்கன்பாளையம் பகுதியில் வீதிவீதியாகச்சென்று பிரச்சாரம் செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. லியோ என். சுந்தரம், தொகுதிக்கு உட்பட்ட மடிப்பாக்கம், காரப்பாக்கம் பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.