தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல் - வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை - சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேட்பு மனு ஏற்பு
Apr 30 2016 1:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற பொதுத்தேர்தலில் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்வது நிறைவுபெற்றதை அடுத்து, மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் மே 16-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா, கடந்த 25-ம் தேதி சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி தேர்தல் அலுவலரிடம் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து, அ.இ.அ.தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்கள் 233 பேரும் நேற்று முன்தினம் தங்களது மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று மனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற்றது. சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. மனுக்களை திரும்பப்பெற மே 2-ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.