திருச்சி கல்லூரி மாணவர் ஒருவர், சிறிய பந்துகைள கொண்டு இந்திய வரைபடம் அமைத்தும், கையால் தர்பூசணிப் பழங்களை உடைத்தும் சாதனை முயற்சி
Sep 2 2016 4:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி கல்லூரி மாணவர் ஒருவர், சிறிய பந்துகைள கொண்டு இந்திய வரைபடம் அமைத்தும், கையால் தர்பூசணிப் பழங்களை உடைத்தும் சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
திருச்சி சட்டக்கல்லூரி மாணவரான அருண்சுந்தர் என்பவர், சாதனை நிகழ்த்தும் வகையில், மூவாயிரம் சிறிய பந்துகளைக் கொண்டு ஒருமணி நேரத்தில் இந்திய வரைபடம் அமைத்தும், ஒரு நிமிடத்தில் 52 தர்ப்பூசணிப் பழங்களை தனது கைகளால் உடைத்தும் புதிய சாதனையை நிகழ்த்தினார். சாதனைப் புத்தகப் பார்வையாளர்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட இந்த இரு புதிய சாதனைகளும், லிம்கா புத்தகம், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட், அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட், ஜெட்லி ரெக்கார்ட் ஆஃப் புக் ஆகிய சாதனைப் புத்தகங்களில் இடம்பெறும் வகையில் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சாதனையை நிகழ்த்திய கல்லூரி மாணவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுதல்களை தெரிவித்தனர்.