ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவி - அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு
Sep 2 2016 5:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவியை தூத்துக்குடியை சேர்ந்த அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மூடப்படாத ஆழ்துளை கிணறுகளில் அவ்வப்போது தவறி விழும் குழந்தைகள் பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுகின்றனர். உயிருக்காக போராடும் குழந்தைகளை மிக விரைவில் காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களான தீனதயாளன், ஆல்பன், சுடலைமணி, சுபாஷ் ஆகிய 4 மாணவர்கள், குழந்தைகளை மீட்பதற்கான புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். மாநில அளவில் நடைபெற்ற பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கத்தில் இந்த புதிய படைப்பை அரசு கல்லூரி மாணவர்கள் சமர்பித்தனர். ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை எவ்வித உயிர் சேதமுமின்றி காப்பாற்றும் கருவியை கண்டுபிடித்த மாணவர்களை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.