சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், ரூ.சுமார் 63 கோடி மதிப்பீட்டிலான பிரம்மாண்ட கலைவாணர் அரங்கம் - காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா - ரூ.2 கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநில செய்தி நிலையக் கட்டடமும் திறப்பு

Feb 15 2016 6:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் இன்று, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், ஒரு லட்சத்து 92 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், சுமார் 63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதிகொண்ட கலைவாணர் அரங்கத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், 2 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநில செய்தி நிலையக் கட்டடத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் இருந்த கலைவாணர் அரங்கம், கடந்த திமுக ஆட்சியில் இடிக்கப்பட்டது என்றும் காலியாக உள்ள அந்த இடத்தில் விரைவிலேயே இந்த அரசு ஒரு பிரம்மாண்டமான கலை அரங்கத்தைக் கட்டும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், ஒரு லட்சத்து 92 ஆயிரம் சதுர அடி கட்டட பரப்பளவில், 62 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பிரம்மாண்டமான முறையில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கலைவாணர் அரங்கத்தினை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த கலைவாணர் அரங்கமானது, மூன்று தளங்களுடன் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் கட்டப்பட்டுள்ளது - இந்த அரங்கு, கலையரங்கமாகவும், நவீன திரையரங்கமாகவும் பயன்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது - கலைவாணர் அரங்கத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் ஆயிரத்து 100 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் காணும் வசதியும், மூன்றாவது தளத்தில் நவீன வசதிகளுடன் சுமார் ஆயிரத்து 300 பேர் அமரக்கூடிய அளவில் பல்நோக்கு அரங்கமும் கட்டப்பட்டுள்ளன.

பொதுமக்களின் வசதிக்காக மூன்று தளங்களுக்கும் சென்று வர நகரும் படிக்கட்டு வசதியும், மின்தூக்கி வசதியும் செய்யப்பட்டுள்ளது - இந்த அரங்கிற்குத் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில் உயர்சக்தியுள்ள மின்னாக்கி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது - மேலும், இந்தப் புதிய கலைவாணர் அரங்கத்தின் தரைத் தளத்தில் அலுவலர்களுக்கான அறைகளும், முதல் தளத்தில் உணவு மையங்களும், இரண்டாம் தளத்தில் விருந்தினர்கள் தங்குவதற்கான அறைகளும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தளங்களில் கூட்டரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன - கலைவாணர் அரங்கத்தின் முன்பாகத் தரைத் தளத்தில் சுமார் 200, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 500 இருசக்கர வாகனங்கள் நிறுத்திடவும், கட்டடத்தின் அடிதளத்தில் சுமார் 50 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 100 இருசக்கர வாகனங்கள் நிறுத்திடவும் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது - இந்தப் புதிய கலைவாணர் அரங்கத்தில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதால் இங்கு வருகை புரியும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவர் -

மேலும், கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்டபொழுது, அருகில் செயல்பட்டு வந்த மாநில செய்தி நிலைய அலுவலகக் கட்டடமும் இடிக்கப்பட்டது - இதனால், மாநில செய்தி நிலைய அலுவலகம் தற்காலிகமாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தில் இயங்கி வந்தது - முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இதனை கருத்தில் கொண்டு, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மாநில செய்தி நிலையத்திற்கு என தனியே ஒரு அலுவலகம் கட்ட ஆணையிட்டார்.

அதன்படி சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், புதிய கலைவாணர் அரங்கத்திற்கு அருகில் 2 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநில செய்தி நிலையக் கட்டடத்தினை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இன்று திறந்து வைத்தார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்ட மாநில செய்தி நிலைய கட்டடமானது, தரை மற்றும் இரண்டு தளங்களுடன், மொத்தம் 17 ஆயிரத்து 100 சதுர அடி கட்டட பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது - இந்த மாநில செய்தி நிலையத்தில், நூலகம் அமைக்க தேவையான இடவசதியும், பொதுமக்கள் அமர்ந்து படிக்கக்கூடிய வகையில் தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன - இக்கட்டடத்தில் ஏராளமான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதால், இங்கு வருகை புரியும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள் -

இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு. K.T. ராஜேந்திரபாலாஜி, தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் திரு. த. உதயச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் திரு. ஜெ. குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00