முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளை, வாக்காளர்களிடம் நேரடியாக எடுத்துச் சென்று, வரும் சட்டமன்றத் தேர்தலில் கழகம் நூறு சதவீத வெற்றியைப் பெற்றிடும் வகையில், ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், மாபெரும் சாதனை விளக்க லட்சியப் பேரணிகள் நடைபெற்றன. அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பெருந்திரளான தொண்டர்கள் கலந்துகொண்டு, சாதனை விளக்கப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.
தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் நடைபெற்ற பேரணியில், அமைச்சர் திரு. P. பழனியப்பன், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று சாதனை விளக்கப் பிரசுரங்களை வழங்கினர்.
கரூர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், குளித்தலை பகுதியில் நடைபெற்ற லட்சியப் பேரணியை, மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை தொடங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற்ற பேரணியில், ஏராளமான கழகத் தொண்டர்கள் பங்கேற்றனர். அரசின் சாதனை விளக்க கையேடுகளை, நாடாளுமன்ற உறுப்பினர் மா. சந்திரகாசி உள்ளிட்டோர் வழங்கினர்.
கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில், ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற்ற லட்சியப் பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். அரசின் சாதனை விளக்க பிரசுரங்களை, வஃக்ப் வாரிய தலைவர் திரு. அ. தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் வழங்கினர்.
பெரம்பலூர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில் மேலமாத்தூரில் நடைபெற்ற லட்சியப் பேரணியில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, அரசின் சாதனைகளை விளக்கும் கையேடுகளை பொதுமக்களிடம் வழங்கினர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற்ற லட்சியப் பேரணியில், திரளான தொண்டர்கள் பங்கேற்று, சாதனை விளக்கப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.
இதேபோன்று தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், சாதனை விளக்க லட்சியப் பேரணிகள் நடைபெற்றன.