தொழில் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் மற்றும் அதனைச் சார்ந்த அலுவலகங்களுக்கு 9 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகளை அமைச்சர் ப. மோகன் ஆய்வு
Feb 5 2016 1:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தொழில் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் மற்றும் அதனைச் சார்ந்த அலுவலகங்களுக்கு 9 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகளை, அமைச்சர் திரு. ப. மோகன் ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா சட்டப்பேரவையில், தொழில் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் மற்றும் அதனைச் சார்ந்த அலுவலகங்களுக்கு கட்டடம் கட்டப்படும் என அறிவித்தார். அதன்படி, கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில், 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 40 ஆயிரம் சதுர அடியில் 5 அடுக்குகளைக் கொண்ட கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை, அமைச்சர் திரு. ப. மோகன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
மேலும், கிண்டி அரசினர் தொழிற்நுட்ப பயிற்சி நிலையத்தில் 7 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டட கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டனர்.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, சென்னை கே.கே. நகரில், மாற்றுத் திறனாளிகளுக்கான ஆணையரகத்தில், நடப்பு நிதியாண்டில் மாற்றுத் திறனாளிகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.