மின்சாரம் தாக்கியும், விபத்துக்களில் சிக்கியும் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் : உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மொத்தம் 24 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவு

Feb 5 2016 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் தாக்கியும், விபத்துக்களில் சிக்கியும் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மொத்தம் 24 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி, வேலூர் மாவட்டம், ஓட்டேரி, இருளர் காலனியைச் சேர்ந்த திரு. கண்ணனின் மனைவி மகேஸ்வரி-

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த திரு. கணபதியின் மகன் முப்பிடாதி;

திம்மராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. நடராஜனின் மகன் போத்திலிங்கம்- கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கடலூர் மாவட்டம், மருதத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. தங்கராசுவின் மகன் முத்துசாமி;

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம், கிழக்கு ஆயக்குடி கிராமத்தைச் சேர்ந்த திரு. சிவகுமாரின் மனைவி ஈஸ்வரி என்கிற பழனியம்மாள் ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த இந்த 5 நபர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி விருதுநகர் மாவட்டம், மேலகோதை நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. குமாரின் மனைவி சத்தியவாணிமுத்து;

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த திரு. கருப்பசாமியின் மனைவி பச்சையம்மாள்;

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், சம்பக்குளம் கிராமத்தைச் சேர்ந்த திரு. குருசாமியின் மகன் கருப்பையா, திரு. கார்மேகத்தின் மனைவி லெட்சுமி, சடையனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த திரு. சத்தியமூர்த்தியின் மனைவி ராமலெட்சுமி;

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ம் தேதி விருதுநகர் நகரம், ராமசாமி ராஜா நகரைச் சேர்ந்த திரு. குருசாமியின் மகன் கணேசன், விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த திரு. செல்வராஜின் மகன் செந்தில்குமார், சிவகங்கை மாவட்டம், கருஞ்சுத்தி கிராமத்தைச் சேர்ந்த திரு. வேலுவின் மகன் பிரபு என்கிற வீரசிங்கம்-

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த திரு. சுப்பிரமணியனின் மகன் கண்ணன் ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த இந்த 9 நபர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00