பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை ஊக்குவிக்க ஈரோட்டில் பொம்மலாட்டம் நடைபெற்றது
Feb 4 2016 10:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில், ஈரோட்டில் பொம்மலாட்டம் நடைபெற்றது.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், மாணவ, மாணவியருக்கு விலையில்லா சீருடை, நோட்டு, புத்தகம், மடிக்கணினி, சத்தான உணவு உள்பட 14 திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில், பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில், ஈரோடு மாவட்டம் நாதகவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொம்மலாட்டம் நடைபெற்றது. மாணவ, மாணவியரின் அறிவுத்திறனையும், ஞாபக சக்தியையும் தூண்டும் வகையில், பொம்மலாட்டத்துடன் பாடங்களையும் நடத்துவதால், மாணவ, மாணவியர் மிகுந்த உற்சாகத்துடன் பாடங்களை கற்கின்றனர்.