ஈரோடு மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் கட்டை விரலை வண்ணத்தில் தோய்த்து தேசிய கொடியை வரைந்து உலக சாதனை
Sep 3 2016 3:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியரசு தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் கட்டை விரலை வண்ணத்தில் தோய்த்து தேசிய கொடியை வரைந்து உலக சாதனை படைத்துள்ளனர்.
67வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் உள்ள பள்ளி ஒன்றில், 758 மாணவ மாணவிகள் புதிய சாதனை முயற்சியை மேற்கொண்டனர். இதன்படி கட்டை விரலை வண்ணங்களில் தோய்த்து வெள்ளை துணியில் பதிவுசெய்தனர். காலை எட்டு மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி 10.30 மணிக்கு நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியை கின்னஸ் அமைப்பு பார்வையிட்டு இதனை உலக சாதனையாக அறிவித்தது. இதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.