திண்டுக்கல்லில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 26 நிமிடம் பரத நாட்டியம் ஆடி புதிய கின்னஸ் சாதனை - ஏற்கெனவே நிகழ்த்தப்பட்ட 12 நிமிட சாதனை முறியடிப்பு
Sep 3 2016 3:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல்லில் 2,372 பேர், தொடர்ந்து 26 நிமிடம் பரத நாட்டியம் ஆடி புதிய சாதனை படைத்துள்ளனர்.
திண்டுக்கல், திருச்சி, மதுரை, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2,372 கலைஞர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் பரத நாட்டிய நிகழ்ச்சிக்கு திண்டுக்கல்லில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருக்குறளை பாடலாக வடிவமைத்து, 26 நிமிட இசையாக ஒலிக்கப்பட்டது. இசைக்கு ஏற்ப 2,372 பரதநாட்டிய கலைஞர்கள் 26 நிமிடங்கள் தொடர்ந்து நடனமாடினர். இதன்மூலம், லிம்கா, ஆசிய புத்தகம் உள்ளிட்ட 6 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூரில் 2,100 மாணவர்கள் 12 நிமிடங்கள் பரதநாட்டியம் ஆடியது இதுவரை உலக சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.