திருச்சியில் நடத்தப்பட்ட வினாடி, வினா உள்ளிட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
Dec 1 2015 8:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
48-வது தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு, திருச்சியில் பொதுநூலகத்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட வினாடி, வினா உள்ளிட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைய தலைமுறையினர் ஆகியோரிடம் புத்தகம் வாசிக்கும் ஆவலைத் தூண்டும் வகையில், திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட அய்யப்பநகர் பொது நூலகத்துறை சார்பில் 48-வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்படுகிறது. இதில், மாணவ, மாணவிகளுக்கான வினாடி, வினா போட்டி, குழந்தைகளுக்கான கதைசொல்லும் போட்டி மற்றும் வாசகர்களுக்கிடையேயான பட்டிமன்றம் மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு அரசு தலைமைக்கொறடா திரு. R. மனோகரன் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும், சிறந்த புரவலர்களுக்கும், வாசகர் வட்டத்திற்கும் பரிசுகளை வழங்கினார்.