விமானங்களின் செயல்பாடு குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நாகர்கோவிலில் சிறிய ரக விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் பங்கேற்ற செயல்விளக்கம்
Nov 28 2015 10:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விமானங்களின் செயல்பாடு குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சிறிய ரக விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் பங்கேற்ற செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் நினைவாக கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு "APJ Vision" என்ற அமைப்பு சார்பில் இந்த செயல் விளக்கம் நாகர்கோவிலில் நடத்தப்பட்டது. இந்த நிறுவனம் தயாரித்துள்ள சிறிய ரக விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களை இயக்கி, அது குறித்து மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர். மாணவர்களிடையே இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்தகைய செயல் விளக்கம் மூலம், இளம் விஞ்ஞானிகளை உருவாக்க முடியும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.