காப்புக்காடுகள் மற்றும் வனச்சாலைகளை சீரமைக்கும் பணிகள் குறித்து, சென்னையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
Nov 27 2015 1:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகிழக்குப் பருவமழையால் சேதமடைந்த காப்புக்காடுகள் மற்றும் வனச்சாலைகளை சீரமைக்கும் பணிகள் குறித்து, சென்னையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
வடகிழக்குப் பருவமழையால் சேதமடைந்த வனச்சாலைகளை சீரமைக்கும் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் அமைச்சர் திரு. எம்.எஸ்.எம். ஆனந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. வனங்கள், சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள், காப்புக்காடுகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை துரித கதியில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், வனத்துறை முதன்மைச் செயலாளர் திரு. ஹன்ஸ்ராஜ் வர்மா, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் திரு. மெல்கானி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.