விழுப்புரம் மற்றும் சென்னையைச் சேர்ந்த இருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் : உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவு

Nov 28 2015 6:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் சென்னை ஷெனாய் நகர் பகுதியைச் சேர்ந்த இருவர், மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தது குறித்தும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர், மின்சாரம் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 2 பேருக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 26-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. பாவாடை என்பவரின் மகன் பெருமாள், செஞ்சி பேரூராட்சி அலுவலகம் அருகே மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

இந்த சம்பவத்தில் திரு. பன்னீர்செல்வம் மற்றும் திரு. விஜயமணி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர் என்ற செய்தியையும் அறிந்து மிகவும் துயரமடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஷெனாய் நகர், கஜலட்சுமி காலனியைச் சேர்ந்த திரு திரவியம் மனைவி திருமதி செண்பகதேவி, பாரதிபுரத்தில் மின்கசிவு ஏற்பட்டிருந்த மின்கம்பம் அருகே சென்றபோது, மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு, அருகிலிருந்த தேங்கிய மழை நீரில் விழுந்ததில், பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மின்சாரம் தாக்கியதில் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திரு. பன்னீர்செல்வம் மற்றும் திரு. விஜயமணி ஆகிய இருவருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 50 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00