முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க, திருப்பூரில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை சார்பில் நெசவாளர்களுக்கான மருத்துவமுகாம் நடைபெற்றது
Oct 9 2015 11:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, திருப்பூரில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை சார்பில், நெசவாளர்களுக்கான மருத்துவமுகாம் நடைபெற்றது.
திருப்பூரில் நடைபெற்ற நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவமுகாமில், இருதய நோய், சர்க்கரை நோய், காசநோய், எலும்பு மூட்டு பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனர். ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற பரிசோதனைகளும் செய்யப்பட்டன. முன்னதாக முகாமை தொடங்கிவைத்து பேசிய அமைச்சர் திரு.எம்.எஸ்.எம். ஆனந்தன், நெசவாளர்களுக்கு சூரியசக்தியுடன் கூடிய 10 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளதைக் குறிப்பிட்டார். இந்த முகாமில், சிகிச்சைப்பெற்றுக்கொண்ட கைத்தறி நெசவாளர்கள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.