ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெசவுத் தொழிலாளர்கள், கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்டோர் நெஞ்சார்ந்த நன்றி
Oct 9 2015 8:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடங்கிவைத்த அம்மா உணவகங்கள் மூலம், நாள்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் பசியாறி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தால் பயனடைந்துவரும் நெசவுத் தொழிலாளர்கள், கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்டோர் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்து வரும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, எண்ணற்ற நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் குறைந்த விலையில் தரமான உணவு கிடைக்கும் வகையில், அம்மா உணவகங்களை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்துவைத்தார். இந்த அம்மா உணவகங்களுக்கு, ஏழை, எளிய மக்கள், மாணவ-மாணவியர், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் இடையேயும் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் செயல்பட்டுவரும் அம்மா உணவகம், நெசவுத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், பயணிகள் என பல்வேறு தரப்பினருக்கும் உணவளிக்கும் அக்சய பாத்திரமாக விளங்குகிறது. இவ்வுணவகத்தில் வயிறார உணவருந்தி வரும் அவர்கள், முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.