பொதுக்கூட்டம் என்ற பெயரில் நையாண்டி நாடகங்களை அரங்கேற்றிவரும் நடிகர் விஜயகாந்த் - நெல்லை மாவட்ட கூட்டத்தில் அனைவரும் டம்மி என தரக்குறைவாகப் பேசியதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம்
Oct 9 2015 8:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொதுக்கூட்டம் என்ற பெயரில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனது நையாண்டி நாடகங்களை நடத்தி வரும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், இதேபாணியில் நெல்லை மாவட்டம் ஆலங்குடியில் நடைபெற்ற கூட்டத்திலும், பொதுமக்கள் அனைவருமே டம்மி எனப்பேசி கூட்டத்தினரை முகம் சுளிக்க வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கட்சியினரையும், பொதுமக்களையும் சந்திப்பதாகக் கூறிக்கொண்டு ஆங்காங்கே பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் விஜயகாந்த், தான் என்ன பேசுகிறோம் என்பது கூடத் தெரியாமல் உளறுவதும், தனது கட்சியினரையே கோபத்துடன் அடிக்கப் பாய்வதுமான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன.
சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அவர், கண்டபடி உளறிக் கொட்டியதோடு, தொண்டர்கள் சிலரை அடிக்கவும் பாய்ந்ததால் அவரது கட்சியினரே விஜயகாந்தை கடுமையாக விமர்சித்தனர்.
இதேபோல் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய விஜயகாந்த், தனக்கே உரித்தான பாணியில் திடீரென பொதுமக்களைப் பார்த்து மிரட்டல் விடுத்தார். தான் பேசுவதை கூட்டத்தினர் கவனிக்காததால், கோபமடைந்த அவர், தொண்டர்களை மிரட்டும் தொனியில் எச்சரித்தார்.
ஒரு கட்டத்தில், கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் அனைவரும் டம்மி என அவர் பேசியதால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், இந்தக் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண்கள் மற்றும் மூதாட்டிகளுக்க பணம் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், அவ்வாறு பணம் வழங்கப்படாததால் ஏராளமான பெண்கள் பொதுக்கூட்ட மேடையை முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அப்போது அங்கு தள்ளுமுள்ள ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் உருவானது.
விஜயகாந்த் கட்சிப் பொதுக்கூட்டம் என்றாலே இதுபோன்ற அபத்தமான நிகழ்வுகள் அரங்கேறுவது வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டது என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.