வெற்று விளம்பர சுற்றுப்பயணத்தின்போது பொது இடங்களில் தொடரும் மு.க.ஸ்டாலினின் அத்துமீறல்கள் : கூடலூரில் ஆட்டோ ஓட்டுநரை கை நீட்டி அறைந்ததால் பரபரப்பு - தி.மு.க. தொண்டரையும் தாக்கியதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி
Oct 9 2015 7:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் முழுவதும் வெற்று விளம்பரத்திற்காக சுற்றுப்பயணம் செய்துவரும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஏற்கெனவே செய்தியாளர்களை அவமதித்த சம்பவத்தையடுத்து, நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஆட்டோ ஓட்டுநரையும், அவரது கட்சியைச் சேர்ந்தவரையும் தாக்கியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதியின் குடும்பச் சண்டை வலுப்பெற்று, தி.மு.க.வில் அடுத்த தலைவர் யார்? என்ற சர்ச்சை நீடித்து வரும் நிலையில், வெற்று விளம்பரத்திற்காக மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். வித்தியாசமான முறையில் உடையணிந்து, தெருவோர தேநீர் கடையில் 'டீ' குடிப்பது, நடைப்பயணம், இருசக்கர வாகனப் பயணம் மேற்கொள்வது என பல்வேறு போலியான நடவடிக்கைகளில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். தனது பயணத்தின்போது, தனக்கே உரித்தான ஆணவப் போக்குடன் அநாகரீக செயல்களில் ஈடுபடுவதை ஸ்டாலின் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். சென்னையில் மெட்ரோ ரயில் தொடங்கப்பட்டதும் விளம்பரம் தேடும் நோக்கில், அதில் பயணிப்பதாகக் கூறிக் கொண்டு, ஸ்டாலின் சக பயணியை அடித்து, அநாகரீகமாகப் பேசி விரட்டியடித்த நிகழ்வு, பொதுமக்களிடையே மிகுந்த கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியதை அனைவரும் அறிவார்கள்.
மக்களிடையே முற்றிலுமாக செல்வாக்கை இழந்துவிட்ட தி.மு.க.வை, தாங்கிப்பிடிக்கும் நோக்கில், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வதாகக் கூறிக்கொண்டு, வெற்று விளம்பரத்திற்காக, அரசியல் Stunt நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மு.க. ஸ்டாலின், ஏற்கெனவே புதுக்கோட்டையில் செய்தியாளர்களையும், பத்திரிகை புகைப்பட நிபுணர்களையும் தரக்குறைவாக பேசியதால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் அதுபோன்ற ஸ்டாலினின் அராஜக சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூருக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரைத் தாக்கி விரட்டிய சம்பவம் பொதுமக்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஆட்டோ ஓட்டுநர் மட்டுமல்லாது, தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவரையும் அடித்து விரட்டிய சம்பவம் தி.மு.க.வினர் மட்டுமல்லாது, பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் தொடர்ந்து இதுபோன்ற அநாகரீகச் செயல்களில் ஸ்டாலின் ஈடுபடுவது, அவரது விரக்தியை வெளிப்படுத்துவதாக உள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.