செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை, கூட்டுறவுத் துறை ஆகியவற்றின் மேம்பாடு குறித்த ஆய்வு கூட்டம் சென்னையில் நடைபெற்றது
Oct 9 2015 7:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில், செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை, கூட்டுறவுத் துறை ஆகியவற்றின் மேம்பாடு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, கூட்டுறவு துறைக்கு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் அடிப்படையில், அவற்றின் செயலாக்கம் குறித்தும், வேளாண் உற்பத்தியை பெருக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், அமைச்சர் திரு. செல்லூர் கே.ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், கூட்டுறவுதுறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கலையரங்கத்தையும், மாநில செய்தி நிலையத்தையும் அமைச்சர் திரு. கே.டி.ராஜேந்திர பாலாஜி நேரில் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர், செய்தி மக்கள் தொடர்புதுறை இயக்குநர், கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
கரூர் ஒத்தக்கடைப் பகுதியில், நோய்த்தடுப்பு தொடர்பான மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. பொது சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நகராட்சி சார்பில் நடைபெற்ற இம்முகாமில் மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை, அமைச்சர்கள் டாக்டர் சி. விஜயபாஸ்கர், திரு. பி. தங்கமணி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் திரு. தங்கமணி தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பல்வேறு துறை சார்ந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழுத் தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.