மின் கம்பிகள் அறுந்து விழுவதால் நேரிடும் உயிரிழப்புகளைத் தடுக்க புதிய கருவி ஒன்றை நாகை மாவட்ட இளைஞர் கண்டுபிடிப்பு
Sep 10 2015 7:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மின் கம்பிகள் அறுந்து விழுவதால் நேரிடும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், புதிய கருவி ஒன்றை நாகை மாவட்ட இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.
புயல், மழைக் காலங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து உயிரிழப்புகள் நேரிடுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த பரமசிவம் என்ற இளைஞர் விபத்தைத் தடுக்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவியை டிரான்ஸ்ஃபார்மருடன் இணைத்தால், அப்பாதையில் உள்ள மின் கம்பிகள் அறுந்து விழுந்தாலும் அதனை மிதிப்பவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என அவர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் திரு.பழனிச்சாமி முன்னிலையில் இந்த கருவியின் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதனை பார்வையிட்ட ஆட்சியர் மின்வாரிய அதிகாரிகளிடம் இதுகுறித்து கருத்துக் கேட்பதாக உறுதியளித்தார்.