செவிலியர் பட்டயப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது : முதல்நாள் கலந்தாய்வில் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
Aug 31 2015 12:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செவிலியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்கியது. 3 நாட்கள் இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள 23 செவிலியர் பள்ளிகளில், பட்டயப் படிப்புகளுக்கான 2 ஆயிரம் இடங்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல் நாளான இன்று விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் உட்பட 819 பேர் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். நாளை நடைபெறவுள்ள கலந்தாய்வில் பங்கேற்பதற்காக 895 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் வரை செவிலியர் பட்டயப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்.