வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் - சிறப்பு கவுண்டர்களில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஏராளமானோர் ஆர்வம்
Aug 31 2015 12:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2015-2016-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், சென்னையில் சிறப்பு கவுன்ட்டர்கள் மூலம் ஏராளமானோர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்து வருகின்றனர்.
2015-2016-ம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கை சம்பளதாரர்களும், ஓய்வூதியதாரர்களும் தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வசதியாக, கடந்த 27-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி தலைமை அலுவலகத்தில் சிறப்பு கவுன்ட்டர்கள் தொடங்கப்பட்டன. சென்னை பகுதிக்கு 30 கவுன்ட்டர்களும், காஞ்சிபுரம் பகுதிக்கு 4 கவுன்ட்டர்களும் என மொத்தம் 34 சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன. கடந்த 4 நாட்களில், இந்த சிறப்பு கவுன்ட்டர்கள் மூலம் சென்னையில் மட்டும் 10 ஆயிரம் பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டு கணக்குப்படி, 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ளவர்கள் மற்றும் வருமான வரி பிடித்தத் தொகையை கோராதவர்கள் மட்டுமே இந்த சிறப்பு கவுன்ட்டர்களில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.