வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் - சிறப்பு கவுண்டர்களில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஏராளமானோர் ஆர்வம்

Aug 31 2015 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

2015-2016-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், சென்னையில் சிறப்பு கவுன்ட்டர்கள் மூலம் ஏராளமானோர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்து வருகின்றனர்.

2015-2016-ம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கை சம்பளதாரர்களும், ஓய்வூதியதாரர்களும் தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வசதியாக, கடந்த 27-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி தலைமை அலுவலகத்தில் சிறப்பு கவுன்ட்டர்கள் தொடங்கப்பட்டன. சென்னை பகுதிக்கு 30 கவுன்ட்டர்களும், காஞ்சிபுரம் பகுதிக்கு 4 கவுன்ட்டர்களும் என மொத்தம் 34 சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன. கடந்த 4 நாட்களில், இந்த சிறப்பு கவுன்ட்டர்கள் மூலம் சென்னையில் மட்டும் 10 ஆயிரம் பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டு கணக்குப்படி, 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ளவர்கள் மற்றும் வருமான வரி பிடித்தத் தொகையை கோராதவர்கள் மட்டுமே இந்த சிறப்பு கவுன்ட்டர்களில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00