முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவையடுத்து, தஞ்சாவூரில் பண்பாட்டுப் பலகணி தொடக்க விழா - பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளை வாரந்தோறும் பொதுமக்கள் கண்டு ரசிக்க ஏற்பாடு
Aug 31 2015 12:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவையடுத்து தஞ்சையில் பண்பாட்டுப் பலகணி தொடக்க விழா நடைபெற்றது. பாரம்பரிய கலைகளை வாரந்தோறும் கண்டு ரசிக்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.
தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில், தஞ்சாவூரில் உள்ள பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பண்பாட்டுப் பலகணி தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் திரு. R. வைத்திலிங்கம், 2012 முதல் 2015-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கலைஞர்களுக்கு கலை இளமணி, கலை வளர்மணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கினார். மேலும், வாரந்தோறும் சனிக்கிழமை கிராமிய கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில், பண்பாட்டுப் பலகணி நிகழ்ச்சியும் தொடங்கிவைக்கப்பட்டது. இதனையடுத்து, நடைபெற்ற பரதநாட்டியம், மற்றும் தப்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். முன்னதாக, அருங்காட்சியகமாக மாற்றப்பட்ட பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வரலாற்று பொக்கிசங்களை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.