தொடர் விடுமுறை காரணமாக, உதகை மலை அலைமோதும் ரயிலில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் : 2-வது சீசன் தொடங்க உள்ளதால் அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை மலை ரயில் பயணத்துக்கான முன்பதிவு நிறைவு

Aug 31 2015 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

தொடர் விடுமுறை காரணமாக, உதகை மலை ரயிலில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும், 2-வது சீசன் தொடங்க உள்ளதால், அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை மலை ரயில் பயணத்துக்கான முன்பதிவு நிறைவுடைந்துள்ளது.

உலகக் புகழ்பெற்ற உதகை மலை ரயிலில், பயணம் செய்ய உள்ளூர் பயணிகள் முதல் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வரை மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 4 மாதங்களாக மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே 4 பெட்டிகளுடன் இயக்கப்படும் மலை ரயிலில், அடர்ந்த வனப்பகுதியில் மலைகளுக்கு இடையே, ஊர்ந்து செல்லும் இந்த ரயில் பயணம் மறக்க முடியாத அனுபவமாக உள்ளதாக சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

குன்னூர்-உதகை இடையே, 5 பெட்டிகளுடன் மலை ரயில் இயக்கப்படுகிறது. கடந்த 3 நாட்களாக, தொடர் விடுமுறை என்பதால், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மிகுந்து காணப்பட்டது. இந்த விடுமுறை நாட்களில் மட்டும் 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பயணித்துள்ளனர். 2-வது சீசனுக்காக, அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை மலை ரயில் பயணம் செய்ய முன்பதிவு நிறைவடைந்துள்ளது என்றும், காத்திருப்போர் பட்டியல் 5 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00