தொடர் விடுமுறை காரணமாக, உதகை மலை அலைமோதும் ரயிலில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் : 2-வது சீசன் தொடங்க உள்ளதால் அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை மலை ரயில் பயணத்துக்கான முன்பதிவு நிறைவு
Aug 31 2015 11:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தொடர் விடுமுறை காரணமாக, உதகை மலை ரயிலில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும், 2-வது சீசன் தொடங்க உள்ளதால், அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை மலை ரயில் பயணத்துக்கான முன்பதிவு நிறைவுடைந்துள்ளது.
உலகக் புகழ்பெற்ற உதகை மலை ரயிலில், பயணம் செய்ய உள்ளூர் பயணிகள் முதல் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வரை மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 4 மாதங்களாக மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே 4 பெட்டிகளுடன் இயக்கப்படும் மலை ரயிலில், அடர்ந்த வனப்பகுதியில் மலைகளுக்கு இடையே, ஊர்ந்து செல்லும் இந்த ரயில் பயணம் மறக்க முடியாத அனுபவமாக உள்ளதாக சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
குன்னூர்-உதகை இடையே, 5 பெட்டிகளுடன் மலை ரயில் இயக்கப்படுகிறது. கடந்த 3 நாட்களாக, தொடர் விடுமுறை என்பதால், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மிகுந்து காணப்பட்டது. இந்த விடுமுறை நாட்களில் மட்டும் 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பயணித்துள்ளனர். 2-வது சீசனுக்காக, அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை மலை ரயில் பயணம் செய்ய முன்பதிவு நிறைவடைந்துள்ளது என்றும், காத்திருப்போர் பட்டியல் 5 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.