தமிழகத்தில் புதிய வருவாய்க் கோட்டங்கள் மற்றும் புதிய வருவாய் வட்டங்கள் ஏற்படுத்தப்படும் - புதிய தொழிற்கொள்கை உருவாக்கப்படும் என்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வரவேற்பு
Aug 31 2015 10:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தமிழகத்தில், வருவாய்த்துறையின் சேவைகள் மக்களை விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், மேலும் ஒரு நடவடிக்கையாக, 17 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் 5 புதிய வருவாய்க் கோட்டங்கள் மற்றும் 16 புதிய வருவாய் வட்டங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், தொழில் நிறுவனங்களின் தலைநகரமாக தமிழ்நாட்டை உருவாக்கிட ஏதுவாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான புதிய தொழிற்கொள்கை உருவாக்கப்படும் என்றும் சட்டமன்றத்தில் இன்று அறிவித்ததற்கும் சட்டப்பேரவையில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.