தமிழகத்தில் உள்ள உள்நாட்டு நீர் நிலைகளில், மீன்பிடி உரிமையை குத்தகைக்கு விடுவதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன், மீன் உற்பத்தி திறன் அதிகரிப்பதற்கும் வழி வகுக்கப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்
Aug 31 2015 10:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் உள்ள உள்நாட்டு நீர் நிலைகளில், மீன்பிடி உரிமையை குத்தகைக்கு விடுவதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன், மீன் உற்பத்தி திறன் அதிகரிப்பதற்கும் வழி வகுக்கப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று, உள்நாட்டு நீர் நிலைகளில் பொது ஏலம் மூலம் மீன்பாசி, குத்தகைக்கு விடப்படுவதால் ஏற்பட்டுள்ள நிலை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் திரு.கே.ஏ. ஜெயபால், மீன்பிடி உரிமையை குத்தகைக்கு விடுவதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன், மீன் உற்பத்தி திறன் அதிகரிப்பதற்கு வழி வகுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.