அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, அ.இ.அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகளுக்கான புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களால் ஈர்க்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் மிகுந்த ஆர்வத்தோடு அ.இ.அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர்.
முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா, அனைத்துத் தரப்பு மக்கள் நலனுக்காக செயல்படுத்திவரும் பல்வேறு நலத்திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் மிகுந்த ஆர்வத்துடன் அ.இ.அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்ந்து வருகின்றனர்.
கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர்அணி சார்பில், பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அமைச்சர் திரு. S.P. வேலுமணி, இந்த முகாமை தொடங்கி வைத்தார். நூற்றுக்கணக்கானோர் தங்களை அ.இ.அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில், அமைச்சர்கள் திரு. N. சுப்பிரமணியன், டாக்டர் C. விஜயபாஸ்கர், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் திரு.வி. அலெக்ஸாண்டர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினர். 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கழகத்தில் உறுப்பினர்களாக இணைந்தனர்.
ஈரோடு புறநகர் மாவட்ட கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில், பெருந்துறை பேருந்து நிலையம் அருகே கழக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அமைச்சர் திரு.தோப்பு N.D. வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த முகாமில், நூற்றுக்கணக்கானோர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா செயல்படுத்தி வரும் மகத்தான திட்டங்கள் தங்களை மிகவும் ஈர்த்துள்ளதாக, கழகத்தில் இணைந்தவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
கடலூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில், நெல்லிக்குப்பம் பகுதியில் நடைபெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை, அமைச்சர் திரு. M.C. சம்பத் தொடங்கி வைத்தார். நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள், மிகுந்த ஆர்வத்துடன் அ.இ.அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதேபோல் பண்ருட்டி எம்.ஜி.ஆர். திடலிலும் புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே, மாநகர் மாவட்டக் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. அமைச்சர் திரு. M.S.M. ஆனந்தன், முகாமை தொடங்கி வைத்தார். ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் தங்களை கழகத்தில் இணைத்து வருகின்றனர்.
திருப்பூர் புறநகர் மாவட்ட கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பில், தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. சட்டப்பேரவை துணை சபாநாயகர் திரு. பொள்ளாச்சி ஜெயராமன் முகாமைத் தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில், பீமநகர் பகுதியில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அமைச்சர் திரு.T.P. பூனாட்சி, அரசு தலைமை கொறடா திரு.ஆர்.மனோகரன், கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் திரு.ப.குமார் எம்.பி. உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு, புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினர். பெருந்திரளானோர் கழகத்தில் இணைந்தனர்.
திருச்சியை அடுத்த வையம்பட்டி பகுதியில் நடைபெற்ற கழக உறுப்பினர் சேர்க்கை முகாமில், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தங்களை அ.இ.அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.
பெரம்பலூர் கடைவீதி பகுதியில் நடைபெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, தங்களை அ.இ.அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.
வேலூர் கிழக்கு மாவட்ட கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம், பனப்பாக்கம் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்றது. ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் தங்களை கழகத்தில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
தருமபுரி மாவட்ட கழக மகளிர் அணி சார்பில், நல்லம்பள்ளி கல்லூரி அருகே, கழகத்தில் புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. மாணவிகள் ஏராளமானோர் ஆர்வமுடன் புதிய உறுப்பினர் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கினர்.
காஞ்சிபுரம் மத்திய மாவட்டக் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில், மறைமலைநகரில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பட்டதாரி பெண்கள் என ஏராளமனோர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
நீலகிரி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில், கூடலூரில், புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களை அ.இ.அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். புதிய உறுப்பினர்களை, நீலகிரி மாவட்ட கழக முன்னணி நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் புறநகர் மாவட்டக் கழக மாணவரணி சார்பில் நடைபெற்ற புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாமில், இளைஞர்கள், மாணவர்கள் தாமாக முன்வந்து கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற உறுப்பினர் சேர்ப்பு முகாமில், வக்பு வாரிய தலைவர் திரு. தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், கழக எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில், புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தர்ராஜ், கழக எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் திரு. அலெக்ஸாண்டர், திரு. அன்வர்ராஜா எம்.பி., உள்ளிட்டோர் உறுப்பினர் சேர்ப்பு படிவங்களை வழங்கினர். ஏராளமான இளைஞர்கள் தங்களை கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.