மதுரையில் தொடங்கியுள்ள பிரமாண்ட புத்தக திருவிழா - பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் - ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்
Aug 29 2015 9:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கியுள்ள பிரமாண்ட புத்தக திருவிழாவில், லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
10 நாட்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சி, மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கியுள்ளது. பல்வேறு பதிப்பாளர்களின் புத்தகங்கள், 250 அரங்குகளில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இதில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றுள்ளன. கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில், தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் திறமைகளை வெளிக்கொணர பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகிறது. சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகப் பிரியர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.