தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் - கழகத்தில் இணைய ஆர்வம்காட்டும் மாணவ-மாணவிகள்
Aug 29 2015 6:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தமிழகத்தில் மாணவ மாணவிகளுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாமில், மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கழகத்தில் இணைந்த வண்ணம் உள்ளனர்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா ஆணைப்படி, கழகத்தின் பல்வேறு அமைப்புகளுக்கும் உறுப்பினர்களை சேர்க்கும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. கழக மாணவரணி, மகளிரணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில், மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர், உறுப்பினர் படிவங்களை நிரப்பி ஆர்வத்துடன் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்.
நாகை மாவட்ட கழக மகளிரணி சார்பில், சீர்காழியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில், திரளான பெண்களும், மாணவிகளும் உறுப்பினர் படிவங்களைப் பெற்று, கழகத்தில் சேர விண்ணப்பம் அளித்தனர். இம்முகாமில் அமைச்சர் திரு. கே.ஏ. ஜெயபால், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர்.கே. பாரதிமோகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட கழக மாணவரணி சார்பில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில், கடலாடி அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர், உறுப்பினர் படிவங்களை பெற்று அவற்றை நிரப்பி, கழக நிர்வாகிகளிடம் வழங்கினர். மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள், மிதிவண்டிகள், பாடப்புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க.வில் இணைவது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.