கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியை சிறந்த நகராட்சியாகத் தேர்வு செய்து விருது வழங்கியமைக்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கோபி நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
Aug 29 2015 6:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியை சிறந்த நகராட்சியாகத் தேர்வு செய்து விருது வழங்கியமைக்காகவும், கோபி அரசு மருத்துவமனைக்கு 2 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படும் என அறிவித்துள்ளதற்கும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கோபி நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியின் சிறப்புக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழகத்திலேயே சிறந்த நகராட்சிக்கான 3-வது பரிசுக்கு, கோபி நகராட்சியைத் தேர்வு செய்து, சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா விருது வழங்கியதுடன், 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கியதற்காக நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கோபி அரசு மருத்துவமனைக்கு 2 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சட்டப்பேரவையில் அறிவித்திருப்பதற்கும் நன்றி தெரிவித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.