தே.மு.தி.க. ஆலோசனைக் கூட்டத்தில் உட்கட்சிப் பூசலால் நிர்வாகிகளுக்கு அடி - உதை : கல்யாண மண்டபம் சூறையாடப்பட்டதால் பெரும் பரபரப்பு
Aug 29 2015 6:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற தே.மு.தி.க., ஆலோசனைக் கூட்டத்தில், அக்கட்சியின் அதிருப்தி கோஷ்டியினர் அடி-தடியில் இறங்கியதால் பெரும் பரபரப்பு நிலவியது.
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், தே.மு.தி.க. கட்சியின் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நிர்வாகிகள் நியமனம் செய்ததில் முறைகேடு நடந்ததாகக்கூறி, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் மணிகண்டன், ஒன்றியச் செயலளார் முத்துராஜ் ஆகியோரின் கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதல் அடி-தடியாக உருவெடுத்தது. இதனால் கல்யாண மண்டபம் சூறையாடப்பட்டதுடன், அங்கிருந்த பொருட்களும் தூக்கி வீசப்பட்டன. தே.மு.தி.க. கட்சியினரிடையே ஏற்பட்ட உட்கட்சி பூசலால், புதுப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.