தமிழறிஞர் கால்டுவெல் 124 வது நினைவு தினம் : திருஉருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை
Aug 28 2015 9:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழறிஞர் கால்டுவெல் 124 வது நினைவு தினத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது.
அயர்லாந்தில் கடந்த 1814-ல் பிறந்த ராபர்ட் கால்டுவெல், திராவிட மொழிகள் மீது அளவுகடந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி அம்மொழிகளின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டவர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இடையன்குடி கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகள் தங்கி இருந்து தமிழ்ப் பணியாற்றினார். இவர் ஆங்கில மொழியில் உருவாக்கிய ஒப்பிலக்கணம் உலகப்புகழ் பெற்ற நூலாகும். இத்தகைய பெருமை பெற்ற கால்டுவெல், 124-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடி கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கருணாகரன் மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.