மதுரை கோரிப்பாளையத்தில் வாகனம் ஒன்று நிலைத்தவறி கவிழ்ந்த சம்பவத்தின்போது சிறிதளவு சேதமடைந்த தேவர் சிலையின் பீடம், மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட உடனடி நடவடிக்கையால் சரிசெய்யப்பட்டது

Aug 28 2015 6:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை கோரிப்பாளையத்தில் வாகனம் ஒன்று நிலைத்தவறி கவிழ்ந்த சம்பவத்தின்போது சிறிதளவு சேதமடைந்த தேவர் சிலையின் பீடம், மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட உடனடி நடவடிக்கையால் சரிசெய்யப்பட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நேரிடாமல் இருப்பதற்காக பீடத்தை உயர்த்தி அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலை அமைந்துள்ளது. இப்பகுதியில் லாரி ஒன்று கவிழ்ந்து விழுந்ததில் சிலையின் பீடம் சிறிய அளவில் சேதமடைந்தது. உடனடியாக அதனை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. மேயர் திரு. ராஜன்செல்லப்பா, மாநகராட்சி ஆணையர் பொறுப்பில் உள்ள சாந்தி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சிலையின் பீடம் சரி செய்யப்பட்டது. மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருப்பதற்காக பீடத்தை உயர்த்தி அமைக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. இதனிடையே, லாரி கவிழ்ந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00