வன விலங்குகளிடமிருந்து மனிதர்களை காக்க, கோவை, கிருஷ்ணகிரி, உதகை, கூடலூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன கருவிகளுடன் அதிவிரைவு குழுக்கள் அமைக்கப்படும் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு
Aug 27 2015 10:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மனித - வன உயிரின மோதல்களில் ஈடுபடும் மாமிச உண்ணிகளை எதிர்கொள்வதற்கு, கோவை, கிருஷ்ணகிரி, ஊட்டி, கூடலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடப்பாண்டில் 8 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 அதிவிரைவு குழுக்கள் ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். வேலூர், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் திருச்சி மாவட்டங்களில் சந்தன மரம் வளர்க்கும் திட்டத்திற்காக நடப்பாண்டில் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். வன வளம் மற்றும் பசுமைப் போர்வையினை பாதுகாப்பதிலும், வன உயிரினங்களிடம் இருந்து மனிதர்களை காப்பதிலும், தமது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இதனை மேலும் செம்மைப்படுத்தும் வகையில், மனித - வன உயிரின மோதல்களை தடுப்பதற்கு 5 அதிவிரைவு குழுக்கள்- ஜவ்வாது, சேர்வராயன் மலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் சந்தன மரம் வளர்க்கும் திட்டத்திற்காக ஆண்டொன்றுக்கு 10 கோடி ரூபாய் - சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக காற்றின் தன்மையை தொடர்ச்சியாக உடனுக்குடன் கண்காணிக்க 25 இடங்களில் தொடர் காற்று கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என பல்வேறு அறிவிப்புகளையும் முதலமைச்சர் வெளியிட்டார்.