கோவை நகரைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 1.8 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மிக நீளமான தேசியக் கொடியை வடிவமைத்து சாதனை
Aug 10 2015 10:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை நகரைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 1.8 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மிக நீளமான தேசியக் கொடியை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் பயிலும் ஆயிரத்து 216 மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து இந்தக் கொடியை வடிவமைத்துள்ளனர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கொடி, 1.8 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இக்கொடியில், மாணவ, மாணவிகள் தங்கள் கை முத்திரைகளைப் பதித்துள்ளனர். கோவை மாணவர்களின் இந்தச் சாதனை 4 உலக சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழ்கள் மாணவர் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டன. இந்த தேசியக் கொடியை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J. அப்துல்கலாமுக்கு அர்ப்பணிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.