கோவை மாநகராட்சி சார்பில், மறுசுழற்சி பாடம் என்னும் தலைப்பில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளின் கின்னஸ் சாதனை முயற்சி வெற்றி - சான்றிதழ் வழங்கி பாராட்டு
Aug 6 2015 8:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாநகராட்சி சார்பில், மறுசுழற்சி பாடம் என்னும் தலைப்பில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் மற்றும் தன்னார்வ அமைப்பினர்கள் மேற்கொண்ட சாதனை முயற்சி வெற்றி பெற்றதையடுத்து, இதற்கான சான்றிதழை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி சார்பில், மறுசுழற்சி பாடம் என்னும் தலைப்பில், கின்னஸ் சாதனைக்கான முயற்சி கொடிசியா தொழில்நுட்ப வளாகத்தில் நடைபெற்றது. இதில் குப்பையை தரம் பிரித்தல், குப்பையை தரம் பிரிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள் உட்பட 7 தலைப்புகளில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த 45 பள்ளி மாணவர்களும், 10 கல்லூரி மாணவர்கள் என 12,994 பேர் இந்த சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கின்னஸ் நிறுவன பிரதிநிதிகள் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சி, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதாக அந்நிறுவன அதிகாரி திரு. பிரவீன் பட்டேல் அறிவித்தார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் மாநகராட்சி ஆணையர் திரு. விஜய் கார்த்திகேயனிடம் வழங்கப்பட்டது. உலக அளவில் முதல்முறையாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.