தேனி, விழுப்புரம், கன்னியாகுமரி, திருவள்ளூர், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் 6 பேர் மறைவு : கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் - அனுதாபம்
Aug 4 2015 5:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி, விழுப்புரம், கன்னியாகுமரி, திருவள்ளூர், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் 6 பேர் மறைவுக்கு, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தேனி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் திரு. M. ராஜீபிள்ளை, விழுப்புரம் தெற்கு மாவட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சிக் கழக துணைச் செயலாளர் திருமதி. V. சரோஜா, கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் திரு. N. ஸ்ரீதாஸ், திருவள்ளூர் மேற்கு மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், கண்ணூர் ஊராட்சிக் கழகச் செயலாளர் திரு. P. கஜேந்திரன், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஒன்றியம், சுந்தர நாச்சியார்புரம் ஊராட்சிக் கழகச் செயலாளர் திரு. A. கிருஷ்ணன், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், பிரமனூர் கிளைக் கழக முன்னாள் செயலாளர் திரு. S. ஜெயபிரகாஷ் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார். திரு. ராஜீபிள்ளை, திருமதி. சரோஜா, திரு. ஸ்ரீதாஸ், திரு. கஜேந்திரன், திரு. கிருஷ்ணன் மற்றும் திரு. ஜெயபிரகாஷ் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.