முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில், மாநில சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து ஆலோசனை - அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்பு
Aug 3 2015 10:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து, தலைமைச் செயலகத்தில் இன்று, அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில், நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.ஓ. பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.நத்தம் ஆர்.விசுவநாதன், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.ஆர்.வைத்திலிங்கம், அரசு தலைமைச் செயலாளர் திரு.கு.ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர்கள் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், திரு. கே.ராமானுஜம், உள்துறை முதன்மைச் செயலாளர் திரு.அபூர்வ வர்மா, காவல்துறை தலைமை இயக்குநர் திரு.அசோக் குமார், காவல்துறை சட்டம்-ஒழுங்கு பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் திரு. தி.ராஜேந்திரன், காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு தலைவர் திரு. சௌ.டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.