முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி விலையில்லா லேப் டாப், சைக்கிள் போன்றவை வழங்கப்படுவதால் நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல்
Aug 3 2015 10:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா லேப் டாப், சைக்கிள் போன்றவை வழங்கப்பட்டு வருவதால், நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில், கடந்த கல்வியாண்டை விட, நடப்பு கல்வியாண்டில் 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியரின் எண்ணிக்கை சுமார் 37 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, ஏழை-எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளிடையே, கல்வி கற்றலின் மீது ஈடுபாட்டை ஏற்படுத்தும் வகையில், அரசுப் பள்ளிகளில் - மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா லேப் டாப், சைக்கிள் போன்றவற்றை வழங்க உத்தரவிட்டுள்ளார். அவை, மாணவர்களுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளதால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மேலும், கடந்த 2 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ வகுப்புகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவதாலும் - 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் முழுமையான அளவிற்கு இருப்பதாலும், மாணவ- மாணவியர் அரசுப் பள்ளிகளில் விரும்பிச் சேர்கின்றனர் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.