டாக்டர் அப்துல் கலாமின் மறைவையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோவிலில் மோட்சதீபம் ஏற்றி வைக்கப்பட்டது
Jul 31 2015 6:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டாக்டர் அப்துல் கலாமின் மறைவையொட்டி, ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோவிலில் மோட்சதீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
கலாமின் மறைவையொட்டி, தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்குட்பட்ட அடியனூத்து ஈழத்தமிழர்கள் முகாமில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி, மறைந்த பாரத ரத்னா டாக்டர் கலாமின் திருஉருவப்படத்திற்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கு எடை குறைவான செயற்கைக் கால்களை வடிவமைத்துக் கொடுத்த விஞ்ஞானி அப்துல் கலாமிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோவிலில், கலாமின் மறைவையொட்டி நேற்று மோட்சதீபம் ஏற்றி வைக்கப்பட்டது. கோவில் இணை ஆணையர் தலைமையில் பெண்கள் உட்பட ஏராளமானோர், கலாமின் திருஉருவப்படத்தை கைகளில் ஏந்தியபடி கோவிலை வலம் வந்து மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.