சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த 2-ம் நாள் தொழில் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு நாளைக்கு ஒத்திவைப்பு
Jul 30 2015 6:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழில் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இன்று நடைபெறவிருந்த 2-ம் நாள் கலந்தாய்வு, நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றில், மாணவ-மாணவிகள் சேருவதற்கான கலந்தாய்வு, கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. சிறப்பு பிரிவுகளைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக் கலந்தாய்வு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், ப்ளஸ் டூ படிப்பில் தொழில் பிரிவைத் தேர்ந்தெடுத்து பயின்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு, அண்ணா பல்கலைக் கழகத்தில் நேற்று தொடங்கியது. 3,500 மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் இறுதிச் சடங்குகளை முன்னிட்டு, தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், 2-ம் நாளாக இன்று நடைபெறவிருந்த கலந்தாய்வு, நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், TNPSC குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, இன்று நடைபெறுவதாக இருந்த நேர்காணலும், நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுருக்கெழுத்தர், தட்டச்சர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணியும் நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.