சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த 2-ம் நாள் தொழில் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு நாளைக்கு ஒத்திவைப்பு

Jul 30 2015 6:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழில் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இன்று நடைபெறவிருந்த 2-ம் நாள் கலந்தாய்வு, நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றில், மாணவ-மாணவிகள் சேருவதற்கான கலந்தாய்வு, கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. சிறப்பு பிரிவுகளைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக் கலந்தாய்வு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், ப்ளஸ் டூ படிப்பில் தொழில் பிரிவைத் தேர்ந்தெடுத்து பயின்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு, அண்ணா பல்கலைக் கழகத்தில் நேற்று தொடங்கியது. 3,500 மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் இறுதிச் சடங்குகளை முன்னிட்டு, தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், 2-ம் நாளாக இன்று நடைபெறவிருந்த கலந்தாய்வு, நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், TNPSC குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, இன்று நடைபெறுவதாக இருந்த நேர்காணலும், நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுருக்கெழுத்தர், தட்டச்சர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணியும் நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00