ஆடிப்பெருக்கு விழாவை சீரும், சிறப்புடன் கொண்டாட ஏதுவாக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் திருச்சி ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தது : விவசாயிகளும், பொதுமக்களும் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி
Jul 30 2015 9:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆடிப்பெருக்கு விழாவை சீரும், சிறப்புடன் கொண்டாட ஏதுவாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் திருச்சி ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தது.
வரும் 3-ம் தேதி ஆடிப் பெருக்கு விழாவினை தமிழக மக்கள் சீரோடும், சிறப்போடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடும் வண்ணம், மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிடுமாறு, காவேரி பகுதி பொதுமக்களிடமிருந்தும், விவசாயிகளிடமிருந்தும், விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, காவேரிப் பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் ஆடிப்பெருக்கினை கொண்டாடும் வகையில், ஜூலை 26ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 3-ம் தேதி வரை மேட்டூர் அணையிலிருந்து, ஏற்கெனவே குடிநீருக்காக திறந்துவிடப்பட்டுள்ள 2 ஆயிரம் கனஅடி நீருடன், கூடுதலாக வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி வீதம் என மொத்தம் 6 அயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார்.
அதன்படி, கடந்த 26ம் தேதி காலை 6 மணி முதல், மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி வீதம் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஏற்கெனவே குடிநீருக்காக 2 ஆயிரம் கனஅடி வீதம், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீர் நேற்று காலை முக்கொம்பு மேலணையைக் கடந்து மாலை திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தைக் நுங்கும் நுரையுமாக கடந்து சென்றது. ஆடிப்பெருக்கின்பொது பொங்கிவரும் காவேரி ஆற்றைப் போன்று வாழ்வு செழிக்க வேண்டும் என்று வேண்டி வரவேற்ற விவசாயிகளும், பொதுமக்களும் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.