டாக்டர் அப்துல் கலாம் மறைவுக்கு தமிழகம் முழுவதும் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கண்ணீர் அஞ்சலி - வழிபாட்டு தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனை

Jul 29 2015 6:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் மறைவையொட்டி, மாநிலம் முழுவதும் மாணவ-மாணவியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி, அவரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் மறைவையொட்டி, அவரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

வேலூரில் உள்ள தனியார் செவிலியர் பள்ளி மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி, அப்துல்கலாமின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். தன் வாழ்நாள் முழுவதும், இளம் தலைமுறையினரின் எழுச்சி நாயகனாக அப்துல்கலாம் திகழ்ந்ததாக அவர்கள் புகழாரம் சூட்டினர்.

திருச்சி ஜங்சன் ரயில்வே நிலையத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்ட இந்திய மாணவர் இயக்கம் மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் அப்துல்கலாம் மறைவையொட்டி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

கோவை நேரு விளையாட்டு அரங்கில் பயிற்சிபெற்றுவரும் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் மறைவையொட்டி, மவுன அஞ்சலி செலுத்தினர்.

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் திரண்ட கல்லூரி மாணவ-மாணவியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி சங்கு குளி காலனியில் உள்ள மீணவர்கள் ஏராளமானோர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அவரின் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பத்திரிகையாளர் சங்கம் சார்பில், அமைதி ஊர்வலம் நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியில், வர்த்தகர்கள், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கொரநாடு புனித அந்தோனியார் ஆலயத்தில் டாக்டர் அப்துல்கலாம் மறைவையொட்டி, சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பங்குத்தந்தை மரியஜோசப் ஜெரால்டு தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

டாக்டர் அப்துல்கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வேதாரண்யத்தில் வர்த்தகர்கள் கடைகளை அடைத்து அமைதிப் பேரணி நடத்தினர். ராஜாஜி பூங்காவில் இருந்து தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அப்துல்கலாமின் புகழை பரப்பினர்.

புதுக்கோட்டை ஜவஹர் மன்றத்தில், தங்கள் பெற்றோர்களுடன் திரண்ட சிறுவர்கள், கல்லூரி மாணவ-மாணவியர் உள்ளிட்ட ஏராளமானோர் டாக்டர் அப்துல்கலாமின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.

டாக்டர் அப்துல்கலாம் பிறந்த ஊரான ராமேஸ்வரத்தில் திரண்ட புதுக்கோட்டை மாவட்ட கல்லூரி மாணவ-மாணவியர் 500க்கும் மேற்பட்டோர், பாம்பன் பாலத்தில் இருந்து மெழுகுவர்த்தி ஏந்தி, அவரின் இல்லம் வரை அமைதிப் பேரணியாகச் சென்றனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட அனைத்துக் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பழைய பேருந்து நிலையத்தை அடைந்தனர். அங்கு அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில், அப்துல்கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவ-மாணவியர், பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல், படகு குழாமில் உள்ள படகுகளில் கருப்புக் கொடி ஏற்றிய அவற்றின் உரிமையாளர்கள் படகுகளை இயக்காமல் அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அப்துல்கலாமின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், சுற்றுலா வேன் உரிமையாளர்கள், கொடைக்கானல் வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அப்துல்கலாமின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00