நாகை மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மாணவ, மாணவியர் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்பு
Jul 4 2015 7:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மாணவ, மாணவியர் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.
சீர்காழி அருகே உள்ள திருவெண்காட்டில், பொது சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, மலேரியா நோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில் மாணவ, மாணவியர், சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர். இந்தப் பேரணியை சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சக்தி தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றவர்கள், மலேரியா நோய் ஒழிப்பு குறித்த பதாகைகளை ஏந்திச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதனிடையே, நாமக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில், தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி நடைபெற்றது. மாணவ, மாணவியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்ட இப்பேரணியை, மாவட்ட ஆட்சியர் திரு. வ. தட்சிணாமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.பி.பி. பாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேரணியில், பிரச்சார வாகனமும் கலந்துகொண்டு, தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.