முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி மதுரையில் கூட்டுறவு மருந்தகம் திறப்பு : மக்கள் நெஞ்சார்ந்த நன்றி
Jul 4 2015 7:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, மதுரையில், கூட்டுறவு மருந்தகம் திறந்து வைக்கப்பட்டது.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, பொதுமக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகள் கிடைக்கும் வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கூட்டுறவுத்துறை மூலம், மருந்தகங்களை திறக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மதுரை மாவட்ட கூட்டுறவு சங்கம் சார்பில், யானைக்கல் பகுதியில் புதிய கூட்டுறவு மருந்தகத்தை அமைச்சர் திறந்து வைத்தார். இந்த மருந்தகத்தில் அனைத்து வகை மருந்துகளுக்கும் 15 சதவீத தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது. மதுரை மாநகர மேயர், மாவட்ட ஆட்சியர், கூட்டுறவுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தங்கள் பகுதியில் கூட்டுறவு மருந்தகம் தொடங்க வழிவகை செய்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அப்பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.