மக்களின் பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் திருச்சியில் நாணய கண்காட்சி தொடங்கியது
Jul 3 2015 1:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பல நூற்றாண்டு மக்களின் பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், திருச்சியில் நாணய கண்காட்சி தொடங்கியுள்ளது.
ஒரு நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், இலக்கியங்களை பறைசாற்றும் வகையில், திருச்சி நாணயவியல் கழகம் சார்பில் அகில இந்திய நாணயம் மற்றும் ரூபாய் தாள்கள் கண்காட்சி இன்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், இந்தோ - டானிஷ் நாணயங்கள், இந்தோ - டச்சு நாணயங்கள், பிரெஞ்சு - இந்திய நாணயங்கள், மொகலாய நாணயங்கள், பிரிட்டிஷ் இந்திய நாணயங்களில் அரசர் வில்லியம், ராணி விக்டோரியா மற்றும் சேரர், சோழர், பாண்டியர், திருவிதாங்கூர், மைசூர் உள்ளிட்ட குறுநில நாட்டின் வெளியீடுகள், திப்பு சுல்தான் நாணயங்கள் உள்ளிட்டவை இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
மேலும், தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்ட உலோகங்களில் விட்டம், சதுரம் உட்பட பல்வேறு வடிவங்களில் காசு, தம்படி, அணா, ரூபாய், பைசா என நாணய மதிப்பு வாரிய இந்திய, வெளிநாட்டு நாணயங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இன்றைய தலைமுறையினர் நாணயங்கள் மற்றும் அரிய கலை பொருட்கள் சார்ந்த வரலாற்று நிகழ்வை பதிவு செய்து, விழிப்புணர்வை ஏற்படுத்தவே இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு இடையேயான புத்தாக்க அறிவியல் கண்காட்சி உதகையில் தொடங்கியுள்ளது. 102 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் படைப்புகளை காட்சிக்கு வைத்துள்ளனர். தண்ணீரை பயன்படுத்தி இயங்கும் மோட்டார் சைக்கிள், வேகத் தடைக்கு முன்னதாகவே வேகத்தை கட்டுப்படுத்தும் கருவி, சூரிய ஒளி மூலம் மருந்து தெளிப்பான் உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.