சென்னையில் 4 பச்சிளம் குழந்தைகளுக்கு உயரிய தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு குழந்தைகளின் பெற்றோர் நெஞ்சார்ந்த நன்றி
Jul 2 2015 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில், 4 பச்சிளம் குழந்தைகளுக்கு உயரிய தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, குழந்தைகளின் பெற்றோர் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த ஏழை தொழிலாளியின் மனைவிக்கு, திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் எடை குறைவாக பிறந்தன. இதனைத்தொடர்ந்து, உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டது. தற்போது, இந்த குழந்தைகள் இயல்பான வளர்ச்சியை அடைந்துள்ளன. குழந்தைகள் பிறந்த உடனேயே 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியதுடன், அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளித்து, குழந்தைகளை பாதுகாத்து தந்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பெற்றோர் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.